Header Ads



இலங்கையில் இன வன்முறை - கவனம் செலுத்துமாறு பிரித்தானியா கோரிக்கை

இலங்கையில் இனங்களுக்கு இடையிலான வன்முறைகள் தொடர்பில் தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டும் என பிரித்தானியா தெரிவித்துள்ளது.

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டாவுரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில், கடந்த சில தினங்களாக இடம்பெற்றுவரும் அசாதாரண சூழல் தொடர்பில் கருத்து வெளியிடும்போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் அனைவரும் இன முரண்பாடுகளைத் தவிர்க்கும் வகையில் கவனம் செலுத்த வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

குரோத உணர்வு மற்றும் நம்பிக்கையீனங்களை களைவதற்கு அனைத்து அரசியல் தலைவர்களும் முனைப்பு காட்ட வேண்டுமெனவும் அவர் இதன்போது கோரிக்கை முன்வைத்துள்ளார்.

No comments

Powered by Blogger.