Header Ads



மோட்டார் சைக்கிள் ஓட்டிய 16 வயது பிக்கு பலி - 14 வயது பிக்கு காயம்

பொலன்னறுவை - மெதிரிகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளம் பிக்கு ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவருகின்றார்.

குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. படுகாயம் அடைந்த பிக்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றார்.

மெதிரிகிரியவின் பிசோபண்டார பிரதேசத்தில் 16 வயது இளம் பிக்கு ஒருவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் பாதையை விட்டு விலகி மின்கம்பமொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன் போது வண்டியை ஓட்டிச் சென்ற இளம் பிக்கு சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன், வண்டியின் பின்னால் அமர்ந்து சென்ற 14 வயதான மற்றொரு இளம் பிக்கு படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது

No comments

Powered by Blogger.