Header Ads



பேராசை பிடித்தவர் ரணில் - மஹிந்த சாடுகிறார்

மக்கள் நிராகரித்துள்ள போதும் பேராசை காரணமாகவே பிரதமர் அந்த பதவியை தொடர்ந்தும் வகிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லை – ரஜமல்வத்த விபஸ்ஸனா தியான மண்டபத்திற்கு விஜயம் செய்த அவரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் நாளாந்தம் வீழ்ச்சி போக்கிற்கே முகங்கொடுத்து வருகிறது.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஒவ்வொரு கோணங்களிலிருந்து செயற்படுகின்றனர்.

தேசிய அரசாங்கத்தின் ஒப்பந்த காலம் காலாவதியாகியுள்ளது.

இது தொடர்பில் சபாநாயகர் உரிய தீர்மானம் ஒன்றை எட்ட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

No comments

Powered by Blogger.