Header Ads



ஹக்கீமுக்கு அமீரலி பதிலடி

அழகாக பொய் பேசக் கூடியவர், அழகாக படங்காட்டக் கூடியவர் என்ற படியால் ரவூப் ஹக்கீம் பேசி ஏசிக் கொண்டிருக்கின்றார் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார்.

மீராவோடை பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஏறாவூரில் மரச்சின்னத்தில் வெற்றி பெற்று வந்த மௌலானாவுக்கு மரத்தில் கேட்பதற்கு வரம் கிடைக்கவில்லை தராசில் கேட்கின்றார். அவரை எதிர்த்து அதே கட்சியில் இருந்து முதலமைச்சராக வந்த நசீர் அஹமட் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடுகின்றார்.

எங்களது மனைவி, பிள்ளைகள், உறவினர்களுக்கு வசைபாடுகின்ற மேடையாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியுள்ளது என்ற கவலை உங்களுக்கும் இருக்கின்றது, அதே கட்சியின் ஆரம்பத்தில் இருந்தவன் என்ற அடிப்படையில் எங்களுக்கும் இருக்கின்றது.

ஏறாவூரில் தராசுக்கும் யானைக்கும் பேச வேண்டும். காத்தான்குடியில் தராசுக்கு பேச வேண்டும். வாழைச்சேனையில் மரத்துக்கு பேச வேண்டும். வாய் தவறாமல் பேசுகின்றார். அழகாக பொய் பேசக் கூடியவர், அழகாக படங்காட்டக் கூடியவர் என்ற படியால் பேசி ஏசிக் கொண்டிருக்கின்றார்.

அரசியல் அதிகாரம் உயரலாம், பணியலாம், இல்லாமல் போகலாம் ஆனால் நாங்கள் நாங்களாகவே இருந்து கொள்ள வேண்டும். அரசினால் கிடைக்கும் பணத்தினை கல்விக் கூடங்களுக்காக அதிகமாக செலவு செய்திருக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.