Header Ads



நான் இன்னும் அமெரிக்க பிரஜையே - பிரதமர் பதவியை ஒருபோதும் ஏற்கமாட்டேன் - கோத்தபாய

இலங்கை அரசாங்கத்தில் பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ள தான் ஒருபோதும் தயாரில்லை என்று கோத்தபாய ராஜபக்‌ச குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய  அண்மையில் அமெரிக்கா சென்றிருந்தார்.

அமெரிக்காவிலிருந்து இன்று காலை நாடு திரும்பிய கோத்தபாய ராஜபக்‌சவிடம் நாட்டின் பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ள அழைப்புக் கிடைத்தால் சம்மதிப்பீர்களா என்று சிங்கள ஊடகமொன்று கேள்வி எழுப்பியிருந்தது.

அதற்குப் பதிலளித்துள்ள கோத்தபாய ராஜபச, நான் இன்னும் அமெரிக்காவின் பிரஜையாகவே இருக்கின்றேன். அதன் காரணமாக இலங்கை அரசாங்கத்தின் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ள என்னால் முடியாது என்று தெரிவித்துள்ளார்.

எனினும் பொதுஜன பெரமுனவின் சார்பில் அடுத்த ஜனாதிபதித் தேர்தலின் ​போது கோத்தபாய ராஜபக்‌சவே களமிறங்க உள்ளதாக நாடு முழுவதும் பலத்த எதிர்பார்ப்பொன்று நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.