Header Ads



பிரதமர் பதவியை, கருவுக்கு விட்டுக்கொடுப்பதை நிராகரித்த ரணில் - தனியறையில் ஜனாதிபதி


கடந்த அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சரவை மாற்றம் பற்றி விரிவாக ஆராயப்பட்டது.

அமைச்சரவை கூட்டம் முடிந்த கையோடு ஜனாதிபதி, சு.க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களை தனி அறையில் சந்தித்தார்.

பிரதமர் பதவியை விட்டுச் செல்லுமாறு தான் ரணில் விக்ரமசிங்கவுக்கு கூறியது பற்றி அவர் இங்கு விளக்கியதாக அறிய வருகிறது. கட்சித் தலைவர் பதவியில் இருந்து கொண்டு பிரதமர் பதவியை சபாநாயகர் கரு ஜெயசூரியவுக்கு விட்டுக் கொடுக்குமாறு ஜனாதிபதி முன்வைத்த யோசனையை பிரதமர் நிராகரித்தாராம். ஐ.தே.க முக்கியஸ்தர்கள் சிலரும் தன்னிடம் பிரதமர் பதவி மாற்றப்பட வேண்டும் என கோரியிருந்ததையும் அவர் பிரதமரிடம் விளக்கியிருந்தாராம்.

இதன் போது ஐ.ம.சு.மு அரசு அமைப்பதற்கு ஆதரவாக பலர் கருத்து வெளியிட்டார்களாம். துமிந்த திசாநாயக்க தேசிய அரசு தொடர வேண்டும் என கோரினாராம். இந்த நிலை இவ்வாறே தொடரட்டும் எனவும் ஒரு மாத காலத்தினுள் அரசில் பல மாற்றங்களை செய்வதாகவும் ஜனாதிபதி சு.க அமைச்சர்களிடம் குறிப்பிட்டாராம்.

No comments

Powered by Blogger.