Header Ads



அரசாங்கமோ, பிரதமரோ பதவி விலக தேவையில்லை - மகிந்தவின் எதிர்பார்ப்பு நிறைவேறாது

கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் கிடைத்த மக்கள் ஆணை வலுவாகி இருப்பதை, இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்தியிருப்பதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இதனால், அரசாங்கமோ அல்லது பிரதமரோ பதவி விலக தேவையில்லை என குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு அளிக்கப்பட்ட வாக்குகளில் 45 சத வீதமே கிடைத்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்கு வீதம் இம்முறை தேர்தலில் குறைந்துள்ளது.

தேர்தல் முடிவுகளுக்கு அமைய பெரும்பான்மையான வாக்காளர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு எதிராக தமது வாக்குகளை வழங்கியுள்ளனர்.

தேர்தல் முடிவுகள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடினேன்.

தற்போதுள்ள சிக்கல்களுக்கு தீர்வுகண்டு முன்னோக்கி செல்ல உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதியும், பிரதமரும் கூறியுள்ளனர்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் வெற்றியின் மூலம் பிரதமர் பதவியை அடையலாம் என்ற முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் எதிர்பார்ப்பு நிறைவேறாது எனவும் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.