சீட்டுக் குலுக்கலில், வெற்றியாளர் தெரிவு - வலிகாமத்தில் சம்பவம்
நடந்தது முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வாக்காளர்களின் வாக்குகளை விடவும், அதிஷ்டத்தின் மூலம் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை தமிழ் காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் குலுக்கல் முறையின் மூலம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
வலிகாமம் தெற்கு பிரதேசசபைத் தேர்தலில், குப்பிளான் வட்டாரத்தில் சீட்டுக் குலுக்கலின் மூலம் இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பன, தலா 314 வாக்குகளைப் பெற்றிருந்தன.
இதனால், தேர்தல் விதிமுறைகளின் படி, வாக்கு எண்ணும் அதிகாரிகள், சீட்டுக் குலுக்கிப் போட்டு முடிவை அறிவித்தனர்.
சீட்டுக் குலுக்கலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
Post a Comment