Header Ads



சுதந்திரக் கட்சியும் தனி ஆட்சியமைக்க முயற்சி - மைத்திரியிடம் கடிதம் கையளிக்கவும் தீர்மானம்


-AAM. Anzir-

சுதந்திரக் கட்சியும் தனித்து ஆட்சியமைக்க முயற்சிப்பதாக Jaffna Muslim இணையத்திற்கு நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தகவல் கிடைத்தது.

இன்று -13- செவ்வாய்கிழமை இரவுக்குள், சுதந்திரக் கட்சி எம்.பி.க்கள் கையெழுத்திட்டு, தம்மை ஆட்சியமைக்க அழைக்கும்படிஒரு கடிதமொன்றை ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளனர்.

ஏற்கனவே தம்மால் தனி அரசாங்கத்தை நிறுவ முடியுமென ஐக்கிய தேசியக கட்சி குறிப்பிட்டுள்ள நிலையில் தற்போது சுதந்திரக் கட்சியும் தனி அரசாங்கம் நிறுவ முயற்சிப்பதானது மேலும் இழுபறி நிலையை அதிகரிக்கச்செய்யுமென எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் முன்னாள் அதிபர் மஹிந்த ஒத்துழைக்காத பட்சத்தில், சுதந்திரக் கட்சி தனித்து ஆட்சியமைப்பது என்பது இயலாத காரியம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.