Header Ads



மருதமுனை இளைஞர்களுடன், ஹரீஸ் கலந்துரையாடல்


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி அல்ஹாஜ் எச்.எம்.எம். ஹரீஸ் மருதமுனை இளைஞர்களை இன்று (1) வியாழக்கிழமை சந்தித்து கலந்துரையாடினார்.

சரோ பாம் முகாமைத்துவ பணிப்பாளர் எம்.எச்.எம். தாஜூத்தீன் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் கல்முனை மாநகர சபைத் தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிடும் மருதமுனை வேட்பாளர்களான சட்டத்தரணி ஏ.எம். றகீப், ஏ.ஆர். அமீர், எம்.எஸ். உமர் அலி, ஏ.எல்.எம். முஸ்தபா, பட்டியல் வேட்பாளர் சட்டத்தரணி எம்.ஐ. றைசுல் ஹாதி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மருதமுனை மத்திய குழு உறுப்பினர் சட்டத்தரணி அன்சார் மௌலானா மற்றும் மருதமுனை பிரதேச விளையாட்டுக் கழகங்கள் இளைஞர் அமைப்புகள் போன்றவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். 

(அகமட் எஸ். முகைடீன்)




No comments

Powered by Blogger.