Header Ads



அம்பாறை செல்கிறார் ரணில்

ஜும்ஆப் பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் வியாபார நிலையங்கள் தாக்கப்பட்ட அம்பாறை நகருக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் சனிக்கிழமை (3) வருகைதர இருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் பிரதி அமைச்சருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் என்ற வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அம்பாறை நகருக்கு விஜயம் செய்ய வேண்டுமென விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் பிரதமரிடம் அவசர வேண்டுகோளினை தொலைநகல் ஊடாக நேற்று (27) வௌ;வாய்க்கிழமை விடுத்திருந்தார். இது சம்பந்தமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று (28) புதன்கிழமை காலை பிரதமரை சந்தித்து பாதிக்கப்பட்ட பிரதேசத்திற்கு பிரதமர் நேரில் சென்று பார்வையிட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வேண்டுகோள்விடுத்ததோடு குறித்த பிரதேசத்தின் பாதுகாப்பு ஏற்பாடு தொடர்பிலும் கலந்துரையாடினார். இதன்போது பிரதமரின் அம்பாறை விஜயம் தொடர்பான உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.


No comments

Powered by Blogger.