Header Ads



தேசிய அரசாங்கம், தொடரும் என்பது பொய் - டிலான்

தேசிய அரசாங்கம் தொடரும் என்பது பொய் என இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

தொகுதி அமைப்பாளர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் இன்று -15- இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான புதிய அரசாங்கமொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான புதிய அரசாங்கம் அமைக்கப்படும். இதற்கு ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் ஆதரவு கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இணக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, தேசிய அரசாங்கம் தொடர்வதாக கூறப்படுவது பொய் என்றும் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

எனினும், தேசிய அரசாங்கம் தொடரும் என்றும், இவ்வாரத்துக்குள் அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் என்றும் அமைச்சரவை இணை பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.