Header Ads



ஊழலற்ற அரசியலுக்கு, சுதந்திரக் கட்சியை வெற்றிபெறச் செய்யுங்கள் - மஸ்தான்


ஊழலற்ற நிர்வாகங்கள் இம்முறை உள்ளூராட்சிச் மன்றங்களை ஆளவேண்டுமானால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வேட்பாளர்களை தெரிவு செய்து அதிகாரங்களை கையளியுங்கள் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான கெளரவ மஸ்தான் காதர் தெரிவித்தார். 

இன்று -04- புத்தளம் நாகவில்லு எருக்கலம்பிட்டியில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் பொழுதே இக்கருத்துக்களை அவர் தெரிவித்தார். 

எமது வேட்பாளராக புத்தளம் பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் என்ஜினியர் வாரிஸ் அவர்களை ஆதரித்து இடம்பெறும் இக்கூட்டத்தில் என்னை பேசவருமாறு அழைத்தார்கள் எனினும் எனது நிகழ்ச்சி நிரலின் படி இன்னும்  பல கூட்டங்களில் பேச வேண்டியுள்ளது.

என்ஜினியர் வாரிஸ் படித்ததோர் இளைஞர் அவரை வெல்ல வைக்க வேண்டிய தேவை இருக்கிறது. 

இந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இனமதபேதம் கடந்த ஊழலற்ற கட்சி இக்கட்சியை வெல்லவைப்பதன் மூலம் இந்த பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய முடியும் எனக் குறிப்பிட்டார். 

ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்ட மேற்படி நிகழ்வில் அமைச்சர் பைசர் முஸ்தபாவும் உரைநிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.