அனைவருக்குமான இலவச மருத்துவ முகாம்
-hafees jm-
இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு உடுநுவரை அபிவிருத்தி நிதியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அனைவருக்குமான இலவச மருத்துவ முகாம் எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் (04.02.2018) திகதி மு.ப. 8.30 மணி முதல் 4.00 மணி வரை முருதகஹமுல, ஒபல்ல எனும் இடத்தில் அமைந்துள்ள உடுநுவரை அபிவிருத்தி நிதிய வளாகத்தில் நடைபெற உள்ளது.
இவ்விலவச மருத்துவ முகாமில் உடல் பரிசோதனை, சிறுநீரக நோய், நீரிழிவு நோய், பற் சுகாதாரம், மார்பு புற்றுநோய், உள்ளிட்ட பல நோய்களுக்கான சிகிச்சை, பரிசோதனைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகளும் இலவசமாக வழங்கப்பட உள்ளன.
இம்மருத்துவ முகாமில் அரச அனுமதி பெற்ற விசேட வைத்திய நிபுணர்கள் குழு கலந்து கொள்ள உள்ளதுடன் இதன்போது அவசியமான மருந்து பொருட்களும் இலவசமாக வழங்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இன மத பேதமின்றி அனைவரும் இதில் கலந்து கொண்டு கூடுதலான பயனை பெற்றுக்கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
Post a Comment