Header Ads



ஜனாதிபதி வர, வெளியேறிய பிரதமர் - மோதல் முற்றுகிறதா..?


உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் முதல் முறையாக இன்று பாராளுமன்றத்திற்கு சென்ற ஜனாதிபதியின் வருகையை புறக்கணிக்கும் வகையில் பிரதமர், சபையிலிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப் படுகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான மோதல் உச்ச நிலையை அடைந்துள்ளமை இன்று நாடாளுமன்றில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் வெளியேறியதைத் தொடர்ந்து அமைச்சர்களான மலிக் சமரவிக்ரம மற்றும் கபீர் ஹாசிம் ஆகியோரும் உயரிய சபையிலிருந்து வெளியேறியுள்ளனர்.

பாராளுமன்றத்திற்கு இன்று விஜயம் செய்த ஜனாதிபதி, மறைந்த முன்னாள் அமைச்சரும் பேராசிரியருமான விஷ்வ வர்ணபால மீதான அனுதாப பிரேரணையின் கலந்துகொண்டு உரையாற்றுவதற்காக

ஆனால், ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு வருகை தருவதற்கு முன்னரே பிரதமர் பாராளுமன்றத்தில் இருந்து வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்றத்திற்கு ஜனாதிபதி வரும் வேளைகளில் பிரதமர் அவரை வரவேற்கும் முகமாக சபையில் அமர்ந்திருப்பது சம்பிரதாயமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.