Header Ads



இலங்கையின் கூட்டரசாங்கத்திற்கு ஐ.நா. ஆதரவு


இலங்கையின் கூட்டு அரசாங்கத்தின் நல்லிணக்க மற்றும் பொறுப்புக்கூறல் முயற்சிகளுக்கான தமது ஆதரவை ஐக்கிய நாடுகள் சபை நீடித்துள்ளது என வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஐ.நா பிரதிப் பொதுச் செயலாளர் நாயகம் அமீனா மொஹமட் இதனைத் தெரிவித்துள்ளார் என ஆங்கில ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.

ஜெனிவாவில் உள்ள இலங்கையின் நிரந்தர வதிவிட பணியகத்தில் இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம் இடம்பெற்றுள்ளது.

ஐ.நா அதிகாரிகள் உட்பட 200 இற்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.

ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டேரஸ்ஸை பிரதிநிதித்துவப்படுத்தி, ஐ.நா பிரதி பொதுச் செயலாளர் நாயகம் அமீனா மொஹமட் இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார்.

இலங்கையின் கூட்டு அரசாங்கத்தின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் முயற்சிகளுக்கான ஐ.நாவின் ஆதரவை நீட்டிப்பதாக பிரதி பொதுச் செயலாளர் இதன்போது கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.