அடுத்த பிரதமர் கருவா...?
உள்ளுராட்சி மன்ற தேர்தல் பெறுபேற்றை கருத்திற் கொண்டு சிறந்த தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹவுக்கு அறிவுறுத்தல் விடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருவருக்கும் இடையே இடம்பெற்ற கலந்துரையாடல் சுமார் 2 மணி நேரம் வரை தொடர்ந்தது.
மக்களின் எதிர்பார்ப்பு மற்றும் தேர்தல் பெறுபேற்றுக்கு அமைய தமக்கு தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு முன்னர் பிரதமர் தாமாகவே தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது போல சபாநாயகர் கருஜயசூரியவை பிரதமராக பெயரிட்டு அரசாங்கத்தை பொறுப்பேற்பதாக அந்த கலந்துரையாடலின் போது யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இணக்கப்பாடொன்று எட்டப்படாமல் அந்த பேச்சுவார்த்தை நிறைவடைந்தது.
Save the UNP.....save the lankans...
ReplyDeleteShould give some changes....