Header Ads



இலங்கையர்களுக்கு அரிய வாய்ப்பு

உலகின் பல வளர்ச்சியடைந்த நாடுகளில் பயணிகளின் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் இலகு ரயில் சேவை இலங்கையிலும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

அதற்கான ஆரம்ப கண்கானிப்பு நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் ஜுலை மாதம் வரையில் அதன் முக்கிய பணிகள் நிறைவடையும் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, இந்த வருட நடுப் பகுதியில் புதிய ரயில் சேவைத் திட்டம் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் குறிப்பிடடுள்ளார்.

இந்த ரயில் கட்டமைப்பு தற்போதைய திட்டமிடலுக்கமைய 6 வீதி கட்டமைப்புகளில் நிர்மாணிக்கப்படவுள்ளது. அதன் ஆரம்பகட்ட நடவடிக்கையாக மாலபேயில் இருந்து பொரளை வரை ரயில் வீதி நிர்மாணிக்கப்படவுள்ளது.

இந்த திட்டத்திற்கு 1.3 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவி கிடைக்கவுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் மாலபேயில் இருந்து கொழும்பு கோட்டைக்கு 40 நிமிடங்களில் பயணிக்க முடியும்.

அதற்கமைய 2021ஆம் ஆண்டு வரையில் இந்த திட்டம் நிறைவடையவுள்ளது. இன்னும் 3 வருடங்களில் மின்சார ரயில் பயணிக்கும் சந்தர்ப்பம் இலங்கை மக்களுக்கும் கிடைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.