Header Ads



கொரியாவுக்கு செல்ல விரும்புகிறீர்களா..?

கொரிய மொழி திறன் பரீட்சைக்கான விண்ணப்பப்படிவ விநியோகம் எதிர்வரும் திங்கள்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளது.

இந்த விண்ணப்பப்படிவம் மார்ச் மாதம் 2 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள 18 மத்திய நிலையங்களில் விநியோகிக்கப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இம்முறை பரீட்சை உற்பத்தி மற்றும் நிர்மாணம் ஆகிய துறைகளில் இடம்பெறவுள்ளது.

இதனுடன் கொரிய மொழி திறன் பரீட்சை, கணனி ஊடாகவே இடம்பெறவுள்ளது.

நிர்மாணத்துறைக்கான பரீட்சை மார்ச் மாதம் 19 ஆம் திகதி முதல் மே மாதம் 24 ஆம் திகதி வரையும், உற்பத்தி துறைக்கான பரீட்சை மே மாதம் 25 ஆம் திகதி முதல் ஓக்டோபர் மாதம் 5 ஆம் திகதி வரையும் இடம்பெறவுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.