Header Ads



ஆபா­ச­ இளை­ஞர்கள் மீது மணலை தூவிவிட்டு தப்­பி­ய யுவ­திகள் - மக்கள் கூடி­யதால் உள்­ளா­டை­க­ளுடன் ஓடிய இளை­ஞர்கள்

பிறந்­தநாள் கொண்­டாட்­டத்தில் அதி­க­ளவில் போதை­ய­டைந்த இரு இளை­ஞர்கள் ஹோட்டல் ஒன்றில் பணி­யாற்­றிய யுவ­தி­க­ளிடம் தமது அந்­த­ரங்கப் பகு­தி­களை காண்­பித்த குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக கலே­வெல பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

கைது செய்­யப்­பட்­டுள்­ள­வர்­களில் ஒரு­வ­ரது பிறந்­த­நாளை முன்­னிட்டு மது அருந்­திய நண்­பர்­க­ளான மேற்­படி சந்­தேக நபர்கள் இரு­வரும் அதி­க­ள­வான போதையில் கலே­வெல, தல­கி­ரி­யா­கம பிர­தே­சத்­தி­லுள்ள உண­வகம் ஒன்­றுக்கு சென்று சிகரெட் கேட்டு வாய்த்­தர்க்­கத்தில் ஈடு­பட்­டுள்­ளனர்.

அதன்­போது, அந்த உண­வ­கத்தின் பணி­யா­ளர்­க­ளான யுவ­திகள் இரு­வரை குறித்த சந்­தேக நபர்கள் இரு­வரும் தாக்­கி­ய­துடன் காற்­சட்­டை­களை கழற்றி அந்த யுவ­தி­க­ளிடம் தமது மர்மப் பகு­தி­களை காண்­பித்து தகாத வார்த்­தை­களால் பேசி­யுள்­ள­தாக பாதிக்­கப்­பட்ட யுவ­திகள் இரு­வரும் கலே­வெல பொலிஸ் நிலை­யத்தில் செய்­துள்ள முறைப்­பாட்டில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

காற்­சட்­டை­களை கழற்றி ஆபா­ச­மான முறையில் செயற்­பட்ட இளை­ஞர்கள் மீது மணலை தூவி தாக்­கி­விட்டு யுவ­திகள் இரு­வரும் அங்­கி­ருந்து தப்­பி­யோ­டி­யுள்­ளனர். அதன்­போது அங்­கி­ருந்த பொது­மக்கள் ஒன்­று­கூ­டி­ய­தை­ய­டுத்து இளை­ஞர்கள் இரு­வரும் தாம் வந்­தி­ருந்த மோட்டார் சைக்­கிளை அவ்­வி­டத்­தி­லேயே காற்­சட்­டை­களை கைவிட்டு உள்­ளா­டை­க­ளுடன் தப்பிச் சென்­ற­தாக முறைப்­பாட்டில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

முறைப்­பாட்­டுக்­க­மைய சந்­தேக நபர்கள் இரு­வ­ரையும் கைது செய்த பொலிஸார் விசா­ர­ணை­க­ளுக்கு உட்­ப­டுத்­தி­ய­போது அவர்கள் இரு­வரும் கலே­வெல பஹ­ல­வெவ மற்றும் குரக்­கன்­ஹேன ஆகிய பிர­தே­சங்­களை சேர்ந்­த­வர்கள் என்றும் அவர்­களில் ஒரு­வ­ருக்கு திரு­ம­ண­மாகி குழந்தை ஒன்றும் உள்­ள­தா­கவும் தெரி­ய­வந்­துள்­ளது.

தாங்கள் செய்த தவ­றுக்­காக இளை­ஞர்கள் இரு­வரும் பொலிஸார் முன்­னி­லையில் மன்­னிப்பு கோரினர்.

னினும், இளம் யுவ­தி­க­ளிடம் ஆபா­ச­மான முறையில் நடந்துகொண்டதுடன், அவர்களை தாக்கியமைக்காக அவர்கள் இருவரையும் தம்புள்ளை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக கலேவெல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமை பொலிஸ் பரிசோதகர் சானக்க விதானகே தெரிவித்தார்.

(ரெ.கிறிஷ்­ணகாந்)

No comments

Powered by Blogger.