மூன்றிலிரண்டு இல்லாமல், பாராளுமன்றத்தை கலைக்க முடியாது - சட்டநிபுணர் அறிவிப்பு
நான்கரை வருடங்களுக்கு முன்னதாக நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியாது என அரசியலமைப்பு தொடர்பான சட்டத்தரணியான நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்கிரமரட்ன தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகமொன்று இதனைத் தெரிவித்துள்ளது.
ஆட்சியிலிருக்கும் அரசாங்கம் உள்ளாட்சி மன்றங்களை இழந்தால், நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என்ற பாரம்பரியம் அல்லது முன்னுரிமை இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்துக்கு அமைய, நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடனான தீர்மானமொன்றை நிறைவேற்றாமல், நான்கரை வருடங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், இரண்டு பிரதான அரசியல் கட்சிகளும் தேர்தல் முடிவுகளை கவனத்தில் எடுக்க வேண்டும்.
தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளவும், திருத்தங்களை மேற்கொள்ளவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
Post a Comment