Header Ads



அமைச்சரவை மாற்றத்தின் பின்னர், முதலாவது கூட்டம் நாளை

நல்லாட்சி அரசில் நேற்று வழங்கப்பட்ட அமைச்சரவை மாற்றத்தின் பின்னர் முதலாவது அமைச்சரவை கூட்டம் நாளை (27) இடம்பெறவுள்ளது. 

நாளை காலை 9.30 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் இந்த கூட்டம் நடைபெற உள்ளதாக அமைச்சரவை செயலாளர் காரியாலயம் அறிவித்துள்ளது. 

இருப்tபினும், பல அமைச்சர்கள் தற்போது வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டு உள்ளனர். 

அத்துடன் நேற்று வழங்கப்பட்ட அமைச்சரவை மாற்றம் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் இன்று காலை வரை அரசாங்க அச்சுத் திணைக்களத்திற்கு கிடைக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.