நடுவீதிக்கு வந்த அமைச்சர்கள்..!!!
சு.க ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக இங்கும் அங்கும் ஓடித்திரிந்த சிலர் நல்லாட்சி தொடரும் என்ற அறிவிப்புடன் நடு வீதியில் விடப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது. இவர்கள் முன்னாள் ஜனாதிபதியுடனும் ஒன்றிணைந்த எதிரணி முக்கியஸ்தர்களுடனும் பல தடவை பேசியிருந்தனர். பிரதமரின் கீழ் அமைச்சரவையில் இனி அமரப்பேவதில்லை என்று கூறியவர்களுக்கு இந்த முடிவினால் மெல்லவும் முடியாமல் ஜீரணிக்கவும் முடியாமல் திண்டாட நேரிட்டுள்ளது.
இந்த நிலையில், அமைச்சரவை மாற்றத்தின் பின்னர் அமைச்சர்கள் அடங்கலான சில சு.க பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்த எதிரணியுடன் இணையவோ அல்லது சுயாதீனமாக செயற்படவோ தயாராவதாக நம்பகரமாக தெரிய வருகிறது.
இதே வேளை, சு.க அரசாங்கம் உருவாக வேண்டும் என ஓடித்திரிந்த விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகர கடந்த சில நாட்களாக பொது நிகழ்வுகளில்பங்கேற்காது ஒதுங்கியிருந்தார். கடந்த அமைச்சரவை கூட்டத்தில் அவரும் மற்றொரு அமைச்சரான சுசில் பிரேம ஜயந்தும் பங்கேற்றிருக்கவில்லை.
Post a Comment