சு.க. ஆட்சியமைக்க வாய்ப்பு
சுதந்திரக் கட்சி தலைமையில், புதிய அரசாங்கம் நிறுவப்படுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதாக மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசகர்களில் ஒருவர் Jaffna Muslim இணையத்திடம் குறிப்பிட்டார்.
மகிந்தவிடமிருந்தும் அவரது அணியிடமிருந்தும் அதற்கான பச்சைக் கொடி காண்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஐ.தே.க. அதிருப்தி எம்.பி.க்கள் சிலர் சுதந்திரக் கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க இணங்கியுள்ளனர்.
இந்தநிலையில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்று, சுதந்திரக் கட்சி தனி அரசாங்கததை அமைப்பது கைகூடும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதியின் ஆலோசகர் மேலும் jaffna muslim இணையத்திற்கு சுட்டிக்காட்டினார்.
Post a Comment