Header Ads



6 ஆம் திகதி முக்கிய விடயங்களை, அம்பலமாக்கவுள்ள JVP

பிணை முறிப்பத்திர திருடர்களுக்கு மேலதிகமாக வெளிவராத சர்ச்சைக்குரிய ஊழல், மோசடிகள் தொடர்பான விடயங்களை சாட்சியங்களுடன் நாடாளுமன்றத்தில் முன்வைக்க உள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 6 ஆம் திகதி நடைபெறும் விசேட விவாதத்தின் போதே சாட்சியங்களை முன்வைக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விவாதத்தின் பின்னர் எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அப்பழுக்கற்றவர்களுக்கு மக்கள் வாக்களிக்க வாய்ப்பு கிடைக்கும்.

பிணை முறிப்பத்திர மோசடியுடன் சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் மறைந்துள்ள தகவல்கள் மாத்திரமல்லாது பாரிய ஊழல், மோசடிகள் தொடர்பான 34 விசாரணை அறிக்கைகள் உட்பட மேலும் பல மோசடியான செயற்பாடுகள் சம்பந்தமான தகவல்களையும் வெளியிடப் போவதாக அனுரகுமார திஸாநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.