Header Ads



கட்சித் தலைவர்கள் எடுத்த முடிவு, நாளை 10.30 முதல் 4 மணிவரை விவாதம்


பிணைமுறி விவகாரம் மற்றும் பாரிய ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் குறித்து ஆணைக்குவின் அறிக்கை  தொடர்பிலான நாடாளுமன்றில் முன்னெடுக்கப்படவுள்ள விவாதங்களுக்கு மேலும் இரு தினங்களை பெற்றுக்கொடுக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாடாளுமன்றில் இன்றைய தினம் இடம்பெற்ற கட்சி தலைவர்களுக்கிடையிலான கலந்துரையாடலின் போதே இதற்கான இணக்கப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றின் பிரதி செயலாளர் நீல் இந்தவல தெரிவித்தார்.

இதற்கமைய, எதிர்வரும் 20 ஆம் மற்றும் 21 ஆம் திகதிகளிலும் பிணைமுறி விவகாரம் மற்றும் பாரிய ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் நாடாளுமன்றில் விவாதங்களை மேற்கொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாளைய -06- தினம் குறித்த விவகாரம் தொடர்பில் முற்பகல் 10.30 அளவில் விவாதங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதோடு பிற்பகல் நான்கு மணிக்கு நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments

Powered by Blogger.