Header Ads



சரணடைந்த முதலமைச்சர், பொலிஸாரினால் கைது

ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க இன்று சட்டத்தரணி ஊடாக பதுளை காவற்துறையில் சரணடைந்துள்ளார்.

எவ்வாறாயினும் , இதன்போது அவர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவால் பதுளை மாவட்ட பாடசாலையொன்றின் அதிபர் ஒருவர் துன்புறுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பாடசாலை அதிபர் பதுளை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதையடுத்து இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் ஊவா மகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தமது அதிகாரத்தின் கீழ் இருந்த கல்வி அமைச்சு பொறுப்பில் இருந்து கடந்த தினத்தில் விலகியிருந்தார்.

பாடசாலை அதிபர் ஒருவரை மண்டியிட வைத்தமை தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் நிறைவடையும்வரை தாம் அந்த பதவியில் இருந்து விலகுவதாக சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

Powered by Blogger.