Header Ads



ஜனாதிபதியும், பிரதமரும் மேற்கொள்ளும் சூழ்ச்சி


ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் இணைந்து பொய்யான தர்க்கங்களை முன்வைத்து மக்களின் வாக்குகளை மீண்டும் ஒரு முறை பறிக்க முயற்சித்து வருவதாக முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் இன்று -29- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

சட்டத்திற்கும் அரசியலமைப்புச் சட்டத்திற்கும் முரணாக இருவரும் இதனை செய்து வருகின்றனர். அரசாங்கம் விரும்பி தேர்தலை நடத்த முன்வரவில்லை. தேர்தலை ஒத்திவைப்பது அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுத்து வரும் பழக்கம்.

ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து மேற்கொள்ளும் இந்த சூழ்ச்சியான வேலைத்திட்டத்தில் தேர்தல் ஆணைக்குழு சிக்கிவிடக் கூடாது என கோரிக்கை விடுக்கின்றேன்.

ஜனாதிபதியும் பிரதமரும் பகிரங்கமாக ஒருவருக்கு ஒருவர் குற்றம் சுமத்திக்கொண்டாலும் இவரும் சிறந்த நண்பர்கள். எந்த வகையிலும் தேர்தலை ஒத்திவைக்கவோ அது குறித்து சிந்திக்கவோ முடியாது எனவும் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. எல்லாம் சரி சட்டமேதாவி அவர்களே பென்ஸன் காலத்துல வீட்டுல கிடந்தால் கொஞ்சம் மக்களுக்கும் ஆரோக்கியமாக இருக்கும் என்பது பொதுமக்களின் கருத்து.

    ReplyDelete

Powered by Blogger.