வாக்குப் போடுவதற்கு, முகத்துவாரம் மக்கள் விதித்துள்ள நிபந்தனை
கல்பிட்டி பிரதேசத்தின் முகத்துவாரம் வாக்குச் சாவடியில் வாக்களிப்பதற்கு வாகன வசதி செய்து தருமாறு அப்பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கல்பிட்டி பிரதேச சபைக்கு உட்பட்ட முகத்துவாரம் தொகுதியில் உச்சிமுனை, புதுக்குடியிருப்பு ஆகிய தீவுக் கிராமங்கள் உள்ளடங்கியுள்ளன.
இவற்றில் ஆயிரத்து 600க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இருக்கின்றனர். இவற்றிலிருந்து வாக்குச் சாவடி அமைந்துள்ள முகத்துவாரத்திற்கு செல்ல தரைவழியாக 20 கிலோமீட்டர்கள் பயணிக்க வேண்டும்.
அதுவும் அந்தப் பாதையில் ட்ராக்டர்களில் மட்டுமே பயணம் செய்ய முடியும். அதற்கென ஒரு தடவை பயணிக்க அதிக பணம் செலவாகும்.
கடல்வழியாக பயணிப்பதாயின் 12 கடல் மைல்களை வள்ளத்தில் கடந்தாக வேண்டும். அதற்கும் சுமார் 03 ஆயிரம் ரூபா செலவாகும் .
எனவே தமக்கான வாகன வசதிகளை தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து தந்தால் மட்டுமே உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது தாம் வாக்களிக்கவுள்ளதாக முகத்துவாரம் வாக்குச் சாவடி மக்கள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment