Header Ads



சட்டத்தின் பிடியில் சிக்கப் போவது யாரென, ராஜபக்ஷ குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பயம்

ராஜபக்ஷக்களின் டுபாய் வங்கிக் கணக்குகள் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடக சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்

பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் கடந்த வாரங்களில் வௌநாடுகளுக்கு செல்வது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் நாடாளுமன்றில் தெரிவித்ததுடன், இவர்கள் ​அங்கு செல்வதற்கான காரணங்களை பகிரங்கமாக அறிவிக்க வேண்டுமென்று தெரிவித்துள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,

கடந்த பல நாட்களாக வெளிநாடுகளுக்கு சென்றுள்ள அதிகாரிகள் அங்கு பல தகவல்களைச் சேகரித்துள்ளதாகவும், எதிர்வரும் நாட்களில்  இதுதொடர்பான தகவல்கள் வௌயிடப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

எனவே, இதுதொடர்பில் நாமலுக்கு கனவிலும் தன்னுடைய டுபாய் வங்கிக் கணக்குகள் குறித்து தோன்றுவதாகவும், தற்போது சட்டத்தின் பிடியில் சிக்கப் போது யாரென ராஜபக்ஷ குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பயம் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ராஜித தெரிவித்தார்.

2 comments:

  1. Election kitta warum podu mattum raja pakshakialai patri arivippu seiwadum thajudeen kolai walakku neethimandrathitku eduppadum sahajamappa

    ReplyDelete
  2. ஏமாறாதே ஏமாறாதே ஏமாற்றாதே ஏமாற்றாதே.. ஒன்றும் உங்களால் புடுங்க முடியாது

    ReplyDelete

Powered by Blogger.