Header Ads



இந்தியா ஏவுகணை சோதனை, சில மணிநேரம் மூடப்பட்ட இலங்கை வான்பரப்பு

இலங்கை வான்பரப்பின் விமான ஓடுபாதை மூடப்பட்டிருந்தமை காரணமாக சிங்கப்பூர் மற்றும் கோலாலம்பூர் நோக்கி பயணித்த எத்தியோப்பிய விமானம் ஒன்று சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக இந்திய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவிலிருந்து நேற்று முன்தினம் சிங்கப்பூர் மற்றும் கோலாலம்பூர் நோக்கிப் பயணித்த நுவு368 ரக விமானம், சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா நேற்று முன்தினம் ஒடிசாவில் அக்னி-5 ஏவுகணை சோதனையை மேற்கொண்டிருந்தது.

இதனால், இலங்கையின் விமான ஓடுபாதை வான்பரப்பு மூடப்பட்டிருந்தால், குறித்த விமானம் சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவினால் மேற்கொள்ளப்பட்ட அக்னி-5 ஏவுகணை பரிசோதனை காரணமாக இலங்கை வான்பரப்பின் விமான ஓடுபாதை குறித்த காலப்பகுதியில் சில மணிநேரங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும், இதனால், இலங்கைக்கு பயணித்த விமானப் பயணங்களில் எதுவும் மாற்றம் ஏற்பட்டிருக்கவில்லை என கட்டுநாயக்க விமான நிலையத் தகவல் தெரிவிக்கின்றன.

இந்த விமான ஓடுபாதை மட்டுப்பாடு நேற்றுடன் தளர்த்தப்பட்டதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.