Header Ads



ஜனாதிபதியாக துடிக்கும் மஹிந்த - போட்டியிடத் தயாராகுகிறார்

மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தயாராகி வருகிறார்.

அரசியலமைப்புச் சட்டத்தின் 19 வது திருத்தச் சட்டம் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தலுக்கு பொருந்தாது என்றால், தனக்கு அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட அரசியலமைப்பின்படி தனக்கு எந்த தடையும் இருக்காது என மஹிந்த தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஆறு ஆண்டுகள் ஜனாதிபதி பதவியை வகிக்க சட்ட தடைகள் இருக்கின்றவா என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர்நீதிமன்றத்திடம் விளக்கம் கோரியுள்ளமை தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே மகிந்த ராஜபக்ச இதனை கூறியுள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த ஜனாதிபதி ஆறு ஆண்டுகள் பதவி வகிக்க முடியும் என உயர்நீதிமன்றம் தீர்மானித்தால், தனக்கு மட்டுமல்ல முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும் எனவும் மகிந்த ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.

2 comments:

  1. அலிபாபாவுக்கு இப்பாதான் நீதிமன்றம் ஒன்று இருக்கு அதன் மூலம் சட்டநடவிக்கைகளை விளங்கிகொள்ளலாம் நீதிகேட்கலாம் என்று விளங்கியுள்ளது! அதை தற்போதைய ஜனாதிபதி மைதிரியும் பிரதமர் ரணிலும்தான் லொக்கு சிய்யாவுக்கு கற்றுக்கொடுத்துள்ளார்கள்!

    ReplyDelete
  2. அவரின் 10 வருட ஜனாதிபதி ஆட்சியில் கோத்தப்பாயவின் வெள்ளவேன்தான் உயர்நீதிமன்றம், கோத்தப்பாய உயர்நீதியரசர், நாமலும், பசிலும் வழக்கரிஞர்கள் வேனில் செயல்பட்டவர்கள் கோத்தாவின் நீதி செயற்குழுவினர் இவ்வாறு 10 வருடகாலத்தில் இலங்கை நீதிமன்றத்தின் நிலை இருந்த்து!

    ReplyDelete

Powered by Blogger.