எனது வாயை வெட்டினாலும், பொய் பேசமாட்டேன் - ரணில்
தெனியாயவில் நேற்று நடந்த பரப்புரைக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க, உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்னர், எதிர்வரும் பெப்ரவரி 8ஆம் நாள் நாடாளுமன்றத்தில் பிணைமுறி அறிக்கை குறித்து விவாதிக்கத் தயார் என்று அறிவித்துள்ளார்.
எதிர்வரும் 8ஆம் நாள் நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு சபாநாயகருக்கு தாம் நாளை திங்கட்கிழமை அதிகாரபூர்வமாக கடிதம் அனுப்பவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
”எதிர்வரும் 8ஆம் நாள் விவாதம் நடத்துவதே பொருத்தமானது. அதற்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் பரப்புரையில் மும்முரமாக ஈடுபட்டிருப்பார்கள்.
விவாதம் ஒரு நாளோ, பல நாட்களோ நடத்தப்படுவது பற்றி எனக்குப் பிரச்சினையில்லை.
யாராவது எனது வாயை வெட்டினாலும் கூட அதிகாரத்தில் இருப்பதற்காக பொய் பேசமாட்டேன்.
நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு கோரக் கூடிய சட்பூர்வ அதிகாரமுடைய ஒரே ஒருவர் நான் மட்டும் தான். சபாநாயகருக்குக் கூட அந்த அதிகாரம் இல்லை.
சபாநாயகரை வெள்ளிக்கிழமை சந்தித்தேன். அப்போது வரும் 8ஆம் நாள், நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்குக் கோரும் ஆவணங்களை திங்கட்கிழமை அனுப்புவதாக கூறியுள்ளேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வாயை வெட்டினால் முழு உடம்பும் பொய் பேசும். கால்களும் கைகளும் அதற்காகச் சாட்சி சொல்லும்
ReplyDelete