Header Ads



பொலிஸாரைக் கண்டு கைகளால் சைகைசெய்து, உணவு கேட்ட 94 வயது தாய்

அறை ஒன்­றுக்குள் முறை­யாக உண­வு­ கூட வழங்­காமல் அடைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த 94 வய­தான ஆறு பிள்­ளை­களின் தாய் ஒரு­வரை கண்டி பொலிஸ்­நி­லைய சிறுவர் மற்றும் மகளிர் பணி­யக அதி­கா­ரிகள் சிலர் மீட்­டுள்­ள­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

கட்­டு­கஸ்­தோட்டை, யட்­டி­யா­வல, பிர­தேச தோட்­டத்­தி­லுள்ள வீடு ஒன்றில் அடைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த இந்த வய­தான தாயின் மகள் ஒரு­வரே இவ்­வாறு செய்­துள்­ளமை விசா­ர­ணை­களில் தெரிய வந்­துள்­ள­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

மல­சலம் கழித்த பின்னர் எவரும் சுத்தம் செய்­யா­ததால் கட்­டி­லிலும் அவ­ரது உடம்­பிலும் புழுக்கள் காணப்­பட்­ட­தா­கவும் மூடிக் கிடந்த இருட்­ட­றையில் அடைக்­கப்­பட்­டி­ருந்த இந்த மூதாட்டி பொலி­ஸாரைக் கண்­டதும் கைகளால் சைகை செய்து உணவு கேட்­ட­தா­கவும் பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

மூன்று ஆண் பிள்­ளை­களும் மூன்று பெண் பிள்­ளை­களும் இத்­தாய்க்கு உள்­ளனர். ஒரு புதல்வி தமது வீட்டில் தாயை தடுத்து வைத்து ஏனைய சகோ­தர, சகோ­த­ரிகள் தாயை கவ­னிக்க சந்­தர்ப்பம் வழங்­காமல் இருந்­த­தாக விசா­ர­ணை­களில் தெரிய வந்­துள்­ள­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். இந்­தப்பெண் அவ­ரது தாய்க்கு பிர­தேச வாசிகள் ஏதா­வது உணவை வழங்­கக்­கூட இட­ம­ளிக்­க­வில்லை எனவும் பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

தமது சகோ­தரி ஒரு­வ­ரினால் ஏனைய சகோ­தர, சகோ­த­ரிகள் தாயை கவ­னிக்க இட­ம­ளிக்­காமல் தாயை சிறை வைத்­துள்­ள­தாக மத்­திய மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் மஹிந்த ஏக்­க­நா­யக்­க­வுக்கு செய்த முறைப்­பாட்டை அடுத்து அவர் கண்டி சிறுவர் மற்றும் மக­ளிர் பணி­ய­கத்­துக்கு வழங்­கிய பணிப்புரையை அடுத்து நேற்று முன்தினம் பொலிஸார் இந்த வயோதிப தாயை மீட்டு கண்டி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.