Header Ads



7 மாகாணங்களில் வெற்றி பெறுவோம், கிழக்கில் கடும் போட்டியை ஏற்படுத்துவோம்

இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி நாட்டின் ஒன்பது மாகாணங்களில் 7 மாகாணங்களில் வெற்றி பெறும் என அந்த முன்னணியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று -11- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

புதிய கட்சி என்ற வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மிகவும் குறுகிய காலத்தில் தேர்தலை எதிர்நோக்கியுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, சேறுவில, திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் முதல் முறையாக போட்டியிட்டு கடும் போட்டியை ஏற்படுத்த எண்ணியுள்ளோம்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இரண்டாம் இடத்தை கைப்பற்றும்.

எவ்வாறாயினும் தற்போதைய அரசாங்கம் நாட்டில் இனங்களுக்கு இடையிலான ஐக்கியத்திற்கும் இறையாண்மைக்கும் பல சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. சட்டத்தின் ஆதிபத்தியம் வீழ்ச்சியடைந்துள்ளது எனவும் பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. அமைச்சின் வங்கிக் கணக்கில் இருந்த ஆயிரமாயிரம் கோடி ரூபாவை களவாடிக் கொண்டு அமெரிக்கா சென்று வந்த இந்த மாபெரும் கள்ளனைத் தண்டிக்க இந்த நல்லாட்சிக்கு முடியாமல் இருக்கிறதே. இதே களவுகள் தொடரும் போது அதுபற்றி வாளாவிருக்கும் அரசுக்குப் பெயர் நல்லாட்சியாம்!

    ReplyDelete

Powered by Blogger.