Header Ads



தபால் வாக்கை, பேஸ்புக்கில் பதிவிட்ட 4 பேர் கைது

தபால் வாக்கு பதிவு இடம்பெற்றுக்கொண்டிருக்கும் போது, அதனை புகைப்படம் எடுத்து காணொளி பதிவுகளை முகபுத்தகத்தில் பதிவேற்றம் செய்த குற்றச்சாட்டின் பேரில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

கொழும்பு ,மொனராகலை ,இரத்தினபுரி மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளில் தேர்தல் மத்திய நிலையங்களிலேயே, தபால் வாக்கு பதிவு இடம்பெற்றபோது இவ்வாறு சட்டவிரோதமான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

தேர்தல் சட்டவிதிமுறைகளை மீறி இவ்வாறு செயற்பட்ட விடயம் தொடர்பில் , தேர்தல்கள் ஆணைக்குழுவின் சட்டவிதிமுறைக்கமைய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.