Header Ads



குவைத்தில் 2 இலங்கையர்களின் மரணத்திற்கு காரணமான நச்சுப்புகை

குவைத்தில் பணி­யாற்­றிய நிலையில் மர­ண­ம­டைந்த இலங்­கையைச் சேர்ந்த இரு பணிப்­பெண்கள் நச்சுப்புகையை சுவா­சித்­த­மை­யினால் உயி­ரி­ழந்­துள்­ளமை பிரேத பரி­சோ­த­னை­களில் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக நீர்­கொ­ழும்பு மாவட்ட பொது­வைத்­திய சாலையின் மரண பரி­சோ­தகர் கீர்த்தி சிறி­ஜ­யந்த விக்­ர­ம­ரத்ன தெரி­வித்­துள்ளார்.

குவைத்­தி­லுள்ள வீடொன்றில் ஏற்­பட்ட மின் ஒழுக்­கினால் வெளி­யான நச்சுப் புகையை சுவா­சித்­த­மை­யினால் அவ்­வீட்­டி­லுள்ள வெவ்­வேறு அறை­களில் தங்­கி­யி­ருந்த இலங்­கையை சேர்ந்த பணிப்­பெண்கள் இரு­வரும் உயி­ரி­ழந்­துள்­ள­தாக தெரி­ய­வந்­துள்­ளது.

இரத்­தி­ன­புரி, கஹ­வத்­தையைச் சேர்ந்த ஒரு குழந்­தையின் தாயான டீ. செல்­வ­கு­மாரி (30) மற்றும் திரு­ம­ண­மா­காத ஜீ.ஜீ. நிலந்தி ஷிரோ­மினி குண­வர்­தன (40) ஆகி­யோரே இவ்­வாறு உயி­ரி­ழந்­துள்­ளனர்.

இந்­நி­லையில், அண்­மையில் இலங்­கைக்குக் கொண்­டு­வ­ரப்­பட்ட இவர்­களின் சட­லங்கள் மீதான பிரேத பரி­சோ­த­னைகள் நீர்­கொ­ழும்பு மாவட்ட பொது வைத்­தி­ய­சா­லையில் பிர­தம சட்ட வைத்­திய நிபுணர் ரூஹுல் ஹக்­கினால் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. பிரேத பரி­சோ­த­னை­யின்­போது முன் ­வைக்­கப்­பட்ட சாட்­சி­க­ளுக்­க­மைய விஷப்­பு­கையை சுவா­சித்­த­மை­யினால், சுவாசத் தொகு­தியில் ஏற்­பட்ட பாதிப்பின் கார­ண­மாக அவ்­வி­ரு­வரும் உயி­ரி­ழந்­துள்­ள­தாக உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

No comments

Powered by Blogger.