Header Ads



பஹ்ரைனின் தாராள மனசு, இலங்கைக்கு 22.000 தொன் உரத்தை வாரி வழங்குகிறது


பஹ்ரைனிலிருந்து 22,000 மெட்ரிக் தொன் உரத்தை ஏற்றிய கப்பலொன்று நாளை (15) கொழும்பை வந்தடையவுள்ளது.

ஓமானிலிருந்து கடந்த வாரம் நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட 50,000 மெட்ரிக் தொன் உரம் தற்போது விநியோகிக்கப்பட்டு வருவதாக இலங்கை உர நிறுவனம் தெரிவித்தது.

உரம் கிடைக்காதோர் அது தொடர்பில் தமது செயலகத்திற்கு அறிவிக்க முடியும் என நிறுவனத்தின் தலைவர் ரோஷன வடுகே குறிப்பிட்டார்.

விவசாயிகள் நிறுவனத்தை தொடர்புகொள்வதற்கு தொலைபேசி இலக்கமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

011 – 30 36666 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி, உரம் கிடைக்காத விவசாயிகள் தகவல்களை வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. முஸ்லிம் நாடுகளின் உதவியை பெற்று முஸ்லிகளுக்கே நெருக்குதலை கொடுங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.