Header Ads



பாடசாலை உபகரணங்களை தருவதாக கூறி 10 வயது, மாணவனை பாலியல் வன்புணர்வு செய்தவன் கைது

பாடசாலை உபகரணங்களை பெற்றுதருவதாக கூறி 10 வயது பாடசாலை மாணவனை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய நபரொருவரை கலென்பிந்துவெவ காவல்துறையினர் நேற்று கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர் கலென்பிந்துவெவ – கொக்காவ பிரதேசத்தை சேர்ந்த 30 வயதான நபரொருவர் என தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் கடந்த டிசம்பர் மாதத்தில் அப்பகுதியை சேர்ந்த 10 வயது மாணவனுக்கு பாடசாலை உபகரணங்களை பெற்றுத்தருவதாக கூறி அவரது வீட்டுக்க அழைத்து சென்று பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவன் தொடர்பில் நேற்று -11- காவல்துறைக்கு வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் இன்று கெப்பத்திகொல்லாவ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

1 comment:

Powered by Blogger.