"அபே ஹாமுதுருவனே" என்று அழைக்க 100% தகுதியானவர்
மெதவத்த சோரக ஹிமி, வெலிகமையில் உள்ள 82 புத்த விகாரைகளினதும் மகா சங்கநாயக்க.
46 வருடங்களாக வெலிகமையில் வசித்து வரும் இவர் மாற்று மத சகோதரர்களால் அதிகமாக மதிக்கப்படுபவர்.
ஒரு விடயமாக அவரை சந்திக்க சென்றபோது அவர் கூறிய சில வார்த்தைகள்.
"தர்கா டவுன் பிரச்சினையின் போது வெலிகம பொலிஸ் மா அதிபர் என்னை வந்து சந்தித்தார்.
" ஹாமுதுருவனே,வெலிகமையில் இப்படி ஒரு பிரச்சினை வந்தால் என்ன செய்வது?"
"பயப்படவேண்டாம், இங்கு ஒரு நாளும் அப்படி ஒரு பிரச்சினை வரவே வராது" "இல்லை ஹாமுதுருவனே, மீறி வந்தால் என்ன செய்வது?"
"இதோ நான் எனது இரத்தத்தால் ஒப்பம் வைத்து உங்களுக்கு நான் கடிதம் தருகின்றேன், நான் உயிரோடிருக்கும் வரை அப்படி ஒரு நிகழ்வுக்கு ஒரு நாளும் இடமளிக்க மாட்டேன், மீறி நடந்தால் அதை நிறுத்த எனது உயிரையும் கொடுப்பேன்"
வெறுமனே அரசியல்வாதிகள் போல் பேச்சளவில் இல்லாமல் அதை செயலிலும் நிரூபித்து வரும் ஒரு அற்புத மனிதர்.
"அபே ஹாமுதுருவனே" என்று அழைக்க 100% தகுதியானவர்.
By : Fayas Ahmed
What have we done to strengthen such persons (and groups) who are peace loving, kind, generous and outspoken.
ReplyDelete