Header Ads



வடக்கை வாட்டும் மர்மக் காய்ச்சல் - பூதமோ என மக்கள் அச்சம், கொழும்பில் இருந்து வைத்தியக் குழு

யாழ்ப்பாணத்தில் பரவும் மர்மக் காய்ச்சலுக்கு 8 வயது சிறுவன் ஒருவன் இன்று -27- பலியாகியுள்ளார். 

உடுப்பிடி பகுதியைச் சேர்ந்த இவர், கடந்த 23ம் திகதி மாந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர், யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். 

கடந்த மூன்று மாதங்களில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 9 பேரும் யாழில் 11 பேரும் உரிய முறையில் அடையாளம் காணப்படாத ஒருவகை காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த விடயம் குறித்து ஆராய கொழும்பில் இருந்து விஷேட வைத்தியக் குழுவொன்று முல்லைத்தீவு நோக்கி சென்றுள்ளது. 

எனினும், இந்த காய்ச்சல் குறித்து இதுவரை உரிய முறையில் அடையாளம் காணப்பட்டு மக்களுக்கு விளக்கமளிக்கப்படவில்லை. 

எனவே, பூதத்தின் வேலையாக இருக்குமோ எனவும் யாழ் மக்கள் மத்தியில் அச்சம் நிலவிவருவதாக தெரியவந்துள்ளது.

No comments

Powered by Blogger.