Header Ads



"மஹிந்த ராஜபக்ஷ எமக்கு, ஆதரவளிக்காவிட்டால் நடப்பதே வேறு"

-ஆர்.மகேஸ்வரி-

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கே ஆதரவு வழங்க ​வேண்டும் என துறைமுகங்கள் பிரதி அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார்.

அவ்வாறு அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு ஆதரவாக செயற்படாவிட்டால் எதிர்வரும் தேர்தலில் என்ன நடக்கிறது என பார்த்துக்கொள்ளலாம் எனவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

“மஹிந்த இரண்டு தடவை ஜனாதிபதியாக வருவதற்கு நாமே பல தியாகங்களைச் செய்தோம். எனவே எமது மக்களின் பக்கமே அவர் இருக்க வேண்டும். மஹிந்தவின் தொப்புள் கொடியை வெட்டிய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை மறந்தால்  அது பாசாங்குத் தனம், இதை அவறே தீர்மானிக்க வேண்டும். தாமரை மொட்டு சுவரொட்டிகளில் அவரது உருவத்தைப் பொறிப்பதால் மஹிந்தவுக்கே அதன் பாதிப்புக்கள் கிடைக்கும்” என பிரதி அமைச்சர் நிசாந்த முத்துஹெட்டிகம குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. உங்களின் தலைவரான எங்களின் ஜனாதிபதி அவர்கள் கடும் எச்சரிக்கை செய்துள்ளாரே... ஏதேனும் நடவடிக்கை எடுப்பாரா?

    ReplyDelete
  2. ஒருகாலத்தில் மஹிந்த மிரட்டினார், இப்போ மிரட்டப்படுகறார்.

    ReplyDelete

Powered by Blogger.