Header Ads



​​வேட்பு மனு தாக்கலில் முந்திய தாமரைமொட்டு

தாமரைமொட்டு சின்னத்தின் கீழ் முதலாவது ​​வேட்பு மனு இன்று(11)  தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

3 உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்கள் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அநுராதபுரம் மாவட்டம் கல்நேவ ,திருகோணமலை,கிண்ணியா ஆகிய உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்களே இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.​

வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் ரஞ்சித் சமரக்கோனால் கல்நேவ பிரதேசசபைக்கான வேட்பு மனு  அநுராதபுரம் உதவி தேர்தல்கள் ஆணையாளர் ஹசங்க ரத்னாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.

93 உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்கள் இன்று தொடக்கம்(11) எதிர்வரும் 14ஆம் திகதி  12 மணிவரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது.

No comments

Powered by Blogger.