இது எப்படியிருக்கு...?
கொழும்பு வந்துள்ள மலேஷிய பிரதமருக்கான உத்தியோகபூர்வ நிகழ்ச்சி நிரலைத் தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வரும் இலங்கை வெளிவிவகார அமைச்சும் கொழும்பிலுள்ள மலேஷியத் தூதரகமும் திக்குமுக்காடிப் போயுள்ளதாகத் தகவல்...
ஏனெனில், இது தேர்தல் காலமென்பதால் அரசியல் கட்சிகளின் தலைவர்மார் கொழும்புக்கு வெளியே உள்ளனர். ஏற்கனவே பல இடங்களில் பல கட்சிகளின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதால் இன்று ஆரம்பிக்கும் வேட்புமனுத் தாக்கலை சரியாகச் செய்யவேண்டுமென கட்சிகளின் முக்கியஸ்தர்களும் விழிப்புடன் இருப்பதால் அவர்கள் முழு பிஸி... இந்த நேரத்தில் அவர்கள் எப்படி இவ்வாறான சந்திப்புகளுக்கு வரமுடியும்....?
மலேஷிய பிரதமரைச் சந்திக்க ஆசைதான்... முக்கியமான தலைவர் அவர்... ஆனால், இப்போ இருக்கும் நிலையில் கட்சி வேலைகளை விட்டுவிட்டு அவரைச் சந்தித்தால் கட்சியும் மலேஷிய விமானம்போல் காணாமல்போய்விடுமென்று பகிடியாக சொல்லிச் சிரித்தார் அரசியல் பிரமுகர் ஒருவர். வாஸ்தவம்தான். S/O
Post a Comment