Header Ads



தேர்தலில் போட்டியிடும் குற்றவாளிகள், வாக்குப் போடாதீர்கள் என வேண்டுகோள்

உள்ளுராட்சித் தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளவர்களில் குற்றவாளிகளும் இருப்பதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

மாட்டு திருடர்கள், கொள்ளையர்கள், நிதி மோசடிக்காரர்கள், போதைப் பொருள் வியாபாரிகள் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபட்டவர்கள் வேட்பாளர்களாக பட்டியல் படுத்தப்பட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக அவ்வமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இத்தகையவர்கள் தொடர்பில் தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கையில் உள்ளதாகவும் தகவல்கள் ஊர்ஜிதப்படுத்தப்பட்டதும் அவர்களின் பெயர்களை வெளியிடப்படும். இத்தகையவர்களுக்கு வாக்களிப்பதிலிருந்து தவிர்த்து கொள்ளுமாறு தாம் வாக்காளர்களைக் கேட்டுக் கொள்வதாகவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

1 comment:

  1. அந்த நாசகாரிகளின் பெயர்கள் தெரிந்தால்தானே எமது வாக்குகளை அளிக்கும்போது தவிர்ந்து கொள்ளலாம். எனவே அந்த தீயவர்களின் பெயர்பட்டியலை இங்கு வௌியிட்டால் வாக்காளர்களுக்கு அது நன்மை பயக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.