Header Ads



"த‌யா க‌ம‌கேயை ர‌ணில் விக்கிர‌ம‌சிங்க‌ அடித்துவிர‌ட்ட, மயிலுக்கு ஓட்டுப் போடுங்கள்"

Slmc, Acmc  என‌ அனைத்து முஸ்லிம் க‌ட்சிக‌ளும் unp யுட‌ன் இணைந்தே உள்ள‌ன‌ என்ற ய‌தார்த்த‌தை முஸ்லிம்க‌ள் இன்ன‌மும் புரிந்து கொள்ள‌வில்லை. இவ்விரு க‌ட்சிக‌ளும் unp யுட‌ன் இணைந்தே மைத்திரியை ஜ‌னாதிப‌தியாக்கின‌. இரு க‌ட்சிக‌ளும் unp யுட‌ன் இணைந்தே  ஐ தே க‌ த‌லைவ‌ர் ர‌ணிலை பிர‌த‌ம‌ர் ஆக்கின‌. இந்த‌ நிலையில் ம‌யில் யானையுட‌ன் இணைந்தால் ஹ‌லால், ம‌ர‌ம் யானையுட‌ன் இணைந்தால் ஹ‌ராமா என‌ ச‌மூக‌ம் கேட்ப‌து அத‌ன் அர‌சிய‌ல் அறிவுக்குறைவை காட்டுகிற‌து.

இந்த‌ நாட்டு முஸ்லிம் வாக்காள‌ர்க‌ள் 95 வீத‌ம் நேர‌டியாக‌வோ ம‌றைமுக‌மாக‌வோ unp க்கு ஆத‌ர‌வாக‌வே இருக்கிறோம். நாம் சுத‌ந்திர‌க்க‌ட்சித்த‌லைவ‌ர் மைத்திரியின் க‌ட்சியுட‌ன் இருக்கிறோம் என்று சொன்னால் கூட‌ அதுவும் ம‌றைமுக‌மாக‌ ஐ தே க‌ ர‌ணிலுக்கு ஆத‌ர‌வாக‌வே இருக்கிறோம். கார‌ண‌ம் சு.க‌வும், ஐ தே க‌வும் இணைந்தே நாட்டை ஆட்சி செய்கின்ற‌ன‌.

இப்ப‌டி நிலை இருந்தும் அம்பாரை மாவ‌ட்ட‌த்தில் முஸ்லிம் காங்கிர‌ஸ் யானையை தூக்கிக்கொண்டு வ‌ந்த‌தை நாம் க‌ண்டிப்ப‌த‌ற்கான‌ கார‌ண‌ம் என்ன‌? இது பற்றி உல‌மா க‌ட்சி ப‌ல‌ த‌ட‌வைக‌ள் தெளிவாக்கியும் இன்ன‌மும் ப‌ல‌ருக்கு புரிய‌வில்லை.

ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு மாவ‌ட்ட‌த்தில் acmc அல்ல‌து slmc யானையுட‌ன் இணைந்து போட்டியிட்டு வெற்றி பெற்றால் அத‌ன் மூல‌ம் யாராவ‌து பேரின‌ இனவாதி ப‌ல‌ம் பெறுவாரா ? இல்லை. உதார‌ண‌மாக‌ அம்பாரை மாவ‌ட்ட‌ முஸ்லிம்க‌ளின் சிம்ம‌ சொப்ப‌ன‌மாக‌ இருக்கும் த‌யா க‌ம‌கே போன்ற‌தொரு இன‌ங்காண‌ப்ப‌ட்ட‌ இன‌வாதி அங்கு இல்லை.

ஆனால் அம்பாரை மாவ‌ட்ட‌த்தில் அதுவும் முஸ்லிம்க‌ளின் த‌லை ந‌க‌ரான‌ க‌ல்முனையில் முஸ்லிம் காங்கிர‌ஸ் யானையை கொண்டு வ‌ந்துள்ள‌த‌ன் மூல‌ம் மேற்ப‌டி இன‌வாதியே ப‌ல‌ம‌டைகின்றார். 
க‌ட‌ந்த‌ பொதுத்தேர்த‌லில் மு. கா, யானையிலேயே த‌ன‌து வேற்ப‌ள‌ர்க‌ளை அம்பாரையில் நிறுத்திய‌து. அதே போல் அ.இ. ம‌. காவும் வ‌ண்ணியில் யானையிலேயே த‌ன‌து வேட்பாள‌ர்க‌ளை நிறுத்திய‌து. ஆனாலும் இவ்விரு ப‌குதியிலும்  யானை வென்ற‌பின் என்ன‌ ந‌ட‌ந்த‌து? வ‌ண்ணியில் எந்த‌வொரு பேரின‌ இன‌வாதியும் யானை வென்ற‌தால் ப‌ல‌ம் பெற‌வில்லை. ஆனால் அம்பாரை மாவ‌ட்ட‌த்தில் மு. காவும் இணைந்து யானை வென்ற‌தால் மு. கா மூன்று பொம்மை உறுப்பின‌ர்க‌ளை பெற்றுக்கொண்ட‌தே த‌விர‌ பிர‌தேச‌த்தை ஆளும் அதிகார‌மிக்க‌வ‌ர்க‌ளை பெற‌வில்லை. இத‌ற்கு மாற்ற‌மாக‌ த‌யா க‌ம‌கேயின் முய‌ற்சி மூல‌மே யானை வென்ற‌தாக‌ காட்ட‌ப்ப‌ட்ட‌து. இத‌ன் கார‌ண‌மாக‌ அவ‌ர‌து ம‌னைவிக்கு தேசிய‌ ப‌ட்டிய‌ல் ம‌ற்றும் அமைச்சு ப‌த‌வி வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து. த‌யாவின் உத‌வியுட‌ன் இற‌க்காம‌த்தில் சிலை வைக்க‌ப்ப‌ட்ட‌து. க‌ல்முனையில் இருந்த‌ நிறுவ‌ன‌ங்க‌ள் அம்பாரைக்கு கொண்டு செல்ல‌ப்ப‌ட்ட‌ன‌.  பொத்துவில் முஸ்லிம்க‌ளின் காணிக‌ள் கிடைக்க‌ விடாம‌ல் த‌டை ஏற்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌து. ச‌வூதி வீடுக‌ள் வ‌ழ‌ங்க‌ப்ப‌டுவ‌து த‌டுக்க‌ப்ப‌ட்ட‌து. அம்பாரை மாவ‌ட்ட‌த்தின் ப‌ல‌ முஸ்லிம் பிர‌தேச‌ங்க‌ளில் சிலை வைக்க‌ப்ப‌டும் என‌ அக‌ங்கார‌மாக‌ பேச‌ப்ப‌ட்ட‌து.

இவ்வாறான‌ நிக‌ழ்வுக‌ளை க‌ண்ணூடாக‌ நாம் க‌ண்ட‌த‌ன் கார‌ண‌மாக‌வே க‌ல்முனை, அட்டாளைச்சேனை, ச‌ம்மாந்துறை போன்ற‌ முஸ்லிம்க‌ளின் ப‌ல‌மிக்க‌ கோட்டைக‌ள் யானையின் கையில் வீழ்ந்தால் அது த‌யா க‌ம‌கே என்ற‌ இன‌வாதிக்கே ப‌ல‌த்தை கொடுக்கும் என்ப‌தாலேயே மிக‌க்க‌டுமையாக‌ எதிர்க்கிறோம்.

 அத்தோடு ட‌ய‌ஸ்போராக்க‌ளுக்கும் இது ம‌கிழ்ச்சியை கொடுக்கும். கார‌ண‌ம் அம்பாரை மாவ‌ட்ட‌மே முஸ்லிம்க‌ளின் கோட்டையாக‌ இருப்ப‌தால் அங்கிருந்து முஸ்லிம் க‌ட்சிக‌ளின் ஆதிக்க‌த்தை இல்லாம‌ல் செய்தால் முஸ்லிம் த‌னித்த‌ர‌ப்பு என்ற‌ வார்த்தையை முற்றாக‌ இல்லாம‌ல் செய்ய‌ முடியும் என்ற‌ எதிர்பார்ப்பில் உள்ள‌ன‌ர்.

ஆக‌வேதான் சொல்கிறோம். இந்த‌ உள்ளூராட்சி தேர்த‌லில் அம்பாறை மாவ‌ட்ட‌ முஸ்லிம்க‌ள் யானைக்கு வாக்க‌ளித்து ஏற்க‌ன‌வே த‌யா க‌ம‌கேயினால் அடி வாங்கி நிற்ப‌து போல் நிற்காம‌ல் இந்த‌ ச‌மூக‌த்தின் விடுத‌லைக்காக‌ சிங்க‌ள‌, த‌மிழ் இன‌வாதிக‌ளை எதிர்த்து போராடிக்கொண்டிருக்கும் அமைச்ச‌ர் ரிசாத் ப‌தியுதீன் த‌லைமையிலான‌ அ.இ.ம‌க்க‌ள் காங்கிர‌ஸ் க‌ட்சியை ப‌ல‌ப்ப‌டுத்த‌ முய‌ல‌ வேண்டும். அக்க‌ட்சி க‌ல்முனையிலும் ச‌ம்மாந்துறையிலும் அட்டாளைச்சேனையிலும், நிந்த‌வூரிலும், இற‌க்காம‌த்திலும் வெல்லும் ப‌ட்ச‌த்தில் த‌யா க‌ம‌கேயை ர‌ணில் விக்கிர‌ம‌சிங்க‌ அடித்து விர‌ட்டுவார். அத‌ற்குப்பின் அவ‌ர் வாலாட்டுவ‌து க‌டின‌மாகிவிடும். இத‌னை முஸ்லிம்க‌ளும் குறிப்பாக‌ புத்திஜீவிக‌ளும் புரிந்து கொள்ள‌ வேண்டும் என‌ உல‌மா க‌ட்சி கேட்டுக்கொள்கிற‌து.

- மௌல‌வி முபாற‌க் அப்துல் ம‌ஜீத்
த‌லைவ‌ர், உல‌மா க‌ட்சி,
உய‌ர்பீட‌ உறுப்பின‌ர்,அ.இ. ம‌க்க‌ள் காங்கிர‌ஸ்.

4 comments:

  1. நீரே ஒரு இஸ்லாமிய இனவாதி , நீர் அடுத்தவர்களை குறை கூறுகிண்றீர்களா

    ReplyDelete
  2. முபாரக் அவர்களே, தேர்தல்கள் வந்தால் தான் உங்களுக்கு உழைப்பும் பிழைப்பும் ( மதினாவில் வேலைசெய்யும் போது ஹஜ்ஜு வந்தால் எப்படி உழைப்பும் பிழைப்பும் செய்தீர்களோ அப்படி...இன்னும் பல உண்டு ). இது எல்லோருக்கும் தெரிந்த விடயம். அது இருக்கட்டும் நீங்கள் கூறும் தானைத் தலைவர் றிசாத் அவர்களுக்கு சாய்ந்தமருதில் ஏன் அவரது கட்சியில் வேற்பாளர்களை நிறுத்தாமல் கல்முனைக்குடி மக்களுக்கு மாபெரும் ( அடாவடித்தனமும், நம்பிக்கையாளர் சபையின் விழுமியங்களையும் மீறி, இளம் சமூகத்தினரிடமும், இந்த இரு ஊர்மக்களிடமும் பிரதேச வாதத்தையும், பகையையும், குரோதத்தையும், விரோதத்தையும் வளர்த்து விட்டிருக்கும் இந்த ஹனிபா மாஸ்டரின் சுயேட்சை குழுவை ஆதரித்ததன் மூலம்;- ஜெமீலின் மட்டரகமான சுயநல அரசியலும் பிழைப்பும்) துரோகம் செய்துள்ளார். ஏன் கல்முனைக்குடி மக்கள் கேனப்பயல்கள் என்று நினைத்துள்ளாரோ. கல்முனை மக்கள்;- அரசியலை; அறிவுரீதியாகவும், இலங்கை வாழ் முஸ்லீம் மக்களின் நலன்கள் கருதியும் தங்களின் அரசியலை முன் நகர்த்தி செல்பவர்கள். அவர்களுக்கு தெரியும் இந்த முறை யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று. எம் எஸ் காரியப்பரில் இருந்து எம் எச் எம் அஸ்ரப் வரை அரசியல் வாதிகளை உருவாக்கியவர்கள். முதலில் றிஷாத்தும் ஜெமீலும் இந்த பச்சோந்தி அரசியலை நிறுத்திக் கொள்ள வேண்டும். இவர்களின் இந்த கீழ்த்தரமான, மட்டமான, பச்சோந்தி, விலங்கு மீன் அரசியல் ஹக்கீமிடம் வேண்டுமானால் எடுபடலாம். கல்முனை நகர மக்களிடம் எடுவும் படாது, எடு பாடவும் கூடாது. இந்த கல்முனை மாநகரசையின் அதிகாரம் மிகவும் நீண்டகாலத்து ( 1947...இல் இருந்து ) அரசியல், வன்முறைகளையும், எதிர்ப்புக்களையும், உயிர் இழப்புக்களையும், தியாகங்களையும் சந்தித்து முஸ்லிம்களால் பாதுகாக்கப்பட்டுக் கொண்டு வந்துள்ளது. இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இவற்றை வெறுமெனே றிஸாத்தினதும் ஜெமீலினதும் சுயநல அரசியலுக்கு கலீபகரம் செய்ய முடியாது. செய்யவும் விடக்கூடாது. "ஜாவாத்துக்கு" ஒரு வேண்டு கோல், உமது வாப்பா கட்டி பாதுகாத்த கல்முனையின் அரசியல் அதிகாரத்தை உனது சுயநலத்துக்கு விற்று விடாதீர்.

    " அரசியல் என்பது வெற்றியைய்யோ, பிழைப்பையோ இலக்கு வைத்து பயணிப்பதல்ல மாறாக அது மக்களுக்கு சகல உரிமைகளுடனும், நல்ல நீதியான, சமாதானமான, அமைதியான, ஆரோக்கியமான, பாதுகாப்பான, வாழ்வாதாரத்தை பெற்றுக் கொடுப்பதட்கான பயணமாகும்."

    "கருத்தில் கொள்வார்களா மக்கள்............?????????????????????????"

    ReplyDelete
  3. முபாரக் அவர்களே, தேர்தல்கள் வந்தால் தான் உங்களுக்கு உழைப்பும் பிழைப்பும் ( மதினாவில் வேலைசெய்யும் போது ஹஜ்ஜு வந்தால் எப்படி உழைப்பும் பிழைப்பும் செய்தீர்களோ அப்படி...இன்னும் பல உண்டு ). இது எல்லோருக்கும் தெரிந்த விடயம். அது இருக்கட்டும் நீங்கள் கூறும் தானைத் தலைவர் றிசாத் அவர்களுக்கு சாய்ந்தமருதில் ஏன் அவரது கட்சியில் வேற்பாளர்களை நிறுத்தாமல் கல்முனைக்குடி மக்களுக்கு மாபெரும் ( அடாவடித்தனமும், நம்பிக்கையாளர் சபையின் விழுமியங்களையும் மீறி, இளம் சமூகத்தினரிடமும், இந்த இரு ஊர்மக்களிடமும் பிரதேச வாதத்தையும், பகையையும், குரோதத்தையும், விரோதத்தையும் வளர்த்து விட்டிருக்கும் இந்த ஹனிபா மாஸ்டரின் சுயேட்சை குழுவை ஆதரித்ததன் மூலம்;- ஜெமீலின் மட்டரகமான சுயநல அரசியலும் பிழைப்பும்) துரோகம் செய்துள்ளார். ஏன் கல்முனைக்குடி மக்கள் கேனப்பயல்கள் என்று நினைத்துள்ளாரோ. கல்முனை மக்கள்;- அரசியலை; அறிவுரீதியாகவும், இலங்கை வாழ் முஸ்லீம் மக்களின் நலன்கள் கருதியும் தங்களின் அரசியலை முன் நகர்த்தி செல்பவர்கள். அவர்களுக்கு தெரியும் இந்த முறை யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று. எம் எஸ் காரியப்பரில் இருந்து எம் எச் எம் அஸ்ரப் வரை அரசியல் வாதிகளை உருவாக்கியவர்கள். முதலில் றிஷாத்தும் ஜெமீலும் இந்த பச்சோந்தி அரசியலை நிறுத்திக் கொள்ள வேண்டும். இவர்களின் இந்த கீழ்த்தரமான, மட்டமான, பச்சோந்தி, விலங்கு மீன் அரசியல் ஹக்கீமிடம் வேண்டுமானால் எடுபடலாம். கல்முனை நகர மக்களிடம் எடுவும் படாது, எடு பாடவும் கூடாது. இந்த கல்முனை மாநகரசையின் அதிகாரம் மிகவும் நீண்டகாலத்து ( 1947...இல் இருந்து ) அரசியல், வன்முறைகளையும், எதிர்ப்புக்களையும், உயிர் இழப்புக்களையும், தியாகங்களையும் சந்தித்து முஸ்லிம்களால் பாதுகாக்கப்பட்டுக் கொண்டு வந்துள்ளது. இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இவற்றை வெறுமெனே றிஸாத்தினதும் ஜெமீலினதும் சுயநல அரசியலுக்கு கலீபகரம் செய்ய முடியாது. செய்யவும் விடக்கூடாது. "ஜாவாத்துக்கு" ஒரு வேண்டு கோல், உமது வாப்பா கட்டி பாதுகாத்த கல்முனையின் அரசியல் அதிகாரத்தை உனது சுயநலத்துக்கு விற்று விடாதீர்.

    " அரசியல் என்பது வெற்றியைய்யோ, பிழைப்பையோ இலக்கு வைத்து பயணிப்பதல்ல மாறாக அது மக்களுக்கு சகல உரிமைகளுடனும், நல்ல நீதியான, சமாதானமான, அமைதியான, ஆரோக்கியமான, பாதுகாப்பான, வாழ்வாதாரத்தை பெற்றுக் கொடுப்பதட்கான பயணமாகும்."

    "கருத்தில் கொள்வார்களா மக்கள்............?????????????????????????"

    ReplyDelete
  4. கட்சி கட்சி என்று கத்துகிறார்கள் கட்சி எந்த உரிமைகளை பெற்றுக் கொடுத்தது?கட்சியால் இழந்தவைகள் அதிகம்.

    ReplyDelete

Powered by Blogger.