Header Ads



இலங்கையில் முதன்முறையாக கலப்புமுறை தேர்தல்

இலங்கையில் முதன்முறையாக கலப்பு முறையில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி தேர்தலுக்கு பாரிய நிதி செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய மதிப்பீட்டின்படி 3.5பில்லியன் ரூபாய்கள் இதற்கு செலவாகும் என்று தேர்தல்க்ள் மேலதிக ஆணையாளர் எம் எம் மொஹமட் தெரிவித்துள்ளார்

2018ஆம் ஆண்டின் தேர்தல்கள் என்ற அடிப்படையில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு 5.5 பில்லியன் ரூபாய்களே ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது.

அதில் அரைவாசிக்கும் மேற்பட்ட தொகை உள்ளுராட்சி தேர்தலுக்கு செலவிடப்படவுள்ளது.

இதேவேளை, அரசியல் கட்சிகள் நாளை முதல் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.