எனக்கு அமைச்சு குறித்து, குழப்பமடைய வேண்டாம் - ஹரின்
மக்களுக்கு பணிகளை செய்யக் கூடிய அமைச்சு பதவி தனக்கு எதிர்காலத்தில் கிடைக்கும் எனவும் இதனால் கட்சியினர் குழப்பமடைய கூடாது எனவும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
பதுளை மாநகர சபை, பதுளை பிரதேச சபை மற்றும் லுணுகல பிரதேச சபைகளுக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்புமனுக்களை இன்றைய தினம்(13) பதுளை மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்துள்ளார்.
இதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே ஹரின் பெர்னாண்டோ இதனை கூறியுள்ளார்.
மேலும், எனக்கு கிடைத்துள்ள அமைச்சு குறித்து குழப்பத்தில் இருக்கும் கட்சியினரை குழப்பமடைய வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்காலத்தில் நல்ல செய்தி கிடைக்கும். மக்களுக்கு பணிகளை செய்யக்கூடிய சிறந்த அமைச்சு பொறுப்புடன் நான் வருவேன் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment