“ஐக்கிய தேசியக் கட்சியும், ஒன்றிணைந்த எதிரணியும் கள்ளர்கூட்டம்”
“ஐக்கிய தேசியக் கட்சியும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணியும் கள்ளர்கூட்டம்” என்று கொழும்பு மாநகர சபை மேயர் பதவிக்கு போட்டியிட தயாராகிவரும் அதன் முன்னாள் மேயரான அசாத் ஸாலி குற்றம் சாட்டினார்.
தேர்தல் சட்டங்களை சரியான வகையில் கடைபிடித்தால் நீதியான, சுயாதீனமான தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முழுமையான ஒத்துழைப்பையும் வழங்கத் தயார் என்றும் அவர் கூறினார்.
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தேர்தல்கால சட்டதிட்டங்கள் குறித்து அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் சந்திப்பு கொழும்பு – இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவில் நேற்று காலை நடைபெற்றது.
இதில் ஸ்ரீலங்காவின் பல்வேறு அரசியல் கட்சிகளின் செயலாளர்களும் கலந்துகொண்டனர். இந்த சந்திப்பின் பின்னரே கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயரான அசாத் ஸாலி ஊடகங்களுக்கு மேற்கண்டவாறு கூறினார்.
ஆத்தோடு, இந்த சந்திப்பை நிறைவுசெய்து திரும்பிய ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும், அமைச்சருமான அஜித் பி.பெரேரா தெரிவிக்கையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், இணைந்தாலும், பிரிந்தாலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை தோற்கடித்து எமது கட்சி தேர்தலில் வெற்றிபெறும் என்றார்.
You only pure
ReplyDeletedo you really have any policy? your are the number one hypocrite in our community.
ReplyDelete