Header Ads



நிமல் லன்சா ஏன், இராஜினாமா செய்தார் தெரியுமா..?

உள்நாட்டலுவல்கள் பிரதி அமைச்சர் நிமல் லன்சா இன்று(19) தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர்,

 “ தான் நீர்கொழும்பு தேர்தல் தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதான அமைப்பாளர் பதவியை எதிர்பார்த்திருந்ததாகவும், எனினும்  அது கிடைக்காமை மற்றும் குறித்த பதவிக்கு மற்றொருவர் நியமிக்கப்படுவது தொடர்பில் தான் ஏமாற்றமடைந்துள்ளதாக முன்னாள் பிரதி அமைச்சர் நிமல் லன்ஷா ஜனாதிபதிக்கு எழுதியுள்ள இராஜினாமாக் கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கூட்டு எதிரணியுடன் இணைவது தொடர்பில் எவ்வித முடிவும் எடுக்கவில்லை. தற்போது இருப்பதைப் போன்றே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின்  உறுப்பினர் என்ற வகையில் தனது கடமைகளை முன்னெடுக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. சுய நல அரசியல் விஞ்ஞானிகள்

    ReplyDelete

Powered by Blogger.